Saturday, September 29, 2007

நான் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன்


ஐந்து நாட்கள் வேலையும் அந்த ஐந்து நாட்களுக்குரிய படிப்பு இரண்டு நாட்களிலுமாக ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் வரும் வார இறுதிப் பரீட்சைக்கு நான் படித்துக் கொண்டிருக்கிறேன்..

இந்த ஐந்து மாதங்களில் முதன் முறையாக முழு நேரம் வீட்டில் நிற்கும் வாய்ப்பு.. கிடைக்காத அருமையான ஒன்றைப் பெற்றுக் கொண்ட சந்தோசம்...

முழு நேர இணைய வசதி வேற...

விடிய விடிய விழித்திருந்தாலும் இருக்கலாம்.. காலைத் தூக்கம் கலையக் கூடாது என்கி்ற ரகம் நான்..

எழுப்பி விடும் தொலைபேசி அலாரத்திடம் இன்னும் கொஞ்ச நேரம்... இன்னும் கொஞ்ச நேரம் என்று கெஞ்சி இனியும் முடியாது என்ற நிலையில் எழும்பி, அவசர அவசரமாய் தயாராகி, அது எங்கே... இது எங்கே என்று அம்மாவைப் போட்டு படுத்தியெடுத்து நான் வேலைக்குப் போக செல்ல வேண்டிய நேரம் கடந்தே விட்டிருக்கும்...

இப்போது அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை.. ஏன் என்றால் நான் பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருக்கிறேன்.. :D

இரவிரவாக இணையத்தில் உலாத்தல்...

Really Busy என்று Gtalk, MSN, Yahoo இலும் "I won't be available online much" என்று facebook இலும் message போட்டு விட்டு தொடர்கிறது அரட்டை..

நண்பர்களின் சுவர்க் கிறுக்கல்களுக்கு உடனுக்குடன் பதில் (punctual) ..

விடிவதே தெரியாமல் உறக்கம்...

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.. அப்பப்பா ஒழுங்காகத் தொலைக்காட்சி பார்த்து எத்தனை நாட்கள்...

மீண்டும் இணையத்தில் உலாத்தல் என்று இருந்த போது (என் நண்பர்களின் மொழியில் சொன்னால் குப்பை கொட்டிக் கொண்டிருந்த சமயம்) தோழியின் தொலைபேசி அழைப்பு...

"எங்க நிக்கிறாய்"

"வீட்டை.. "

"ஏன் இண்டைக்கு class இல்லையோ"

"இல்லை.. Study leave... இந்தக் கிழமை full ஆக வீட்டை தான் நிற்கப் போகிறேன்.. வேலையும் இல்லை" - சந்தோசத்தில் நான்

"ஓ.. Examaa? எப்ப Exam?"

"அடுத்த கிழமை தான்....
அதை விட்டிட்டு நீ சொல்லு...என்ன விஸயம்*"


"இல்லை.. வீட்டை நிற்கிறாய் என்றால் வீட்டை வருவம் என்று பார்த்தேன்.. புதுசா மாறின வீட்டுக்கு நீ தான் கூப்பிடுகிறாய் இல்லை... நானாக வருவம் என்று நினைச்சன்."

"No problem.. நீ வா.. இண்டைக்கு முழுக்க வீட்டை தான் நிப்பன்"

"இல்லை.. நீ Exam க்குப் படி.. முடிய வாறன்.. "

"சரி.. உன்ர இஸ்டம்*..."

அவள் வைத்து விட்டாள்..

படிக்கிறேன் என்று சொல்லி அவளை வரவிடாமப் பண்ணிட்டேன் என்று மனசாட்சி உறுத்த ஒரு பாடத்தின் ஓர் அலகைப் ஒருவாறாக படித்து முடித்தேன்...

மீண்டும் இணையத்தில் உலாத்தல்... எல்லாம் மேய்ஞ்சு முடிஞ்சு.. அலுப்பாக இருந்தது..தொலைக்காட்சியும் அலுப்படிச்சுது..

கொஞ்சம் நித்திரை கொண்டால் நல்லா இருக்கும் போல இருந்திச்சு.. படுப்பம் என்று படுத்தால் பாழாய்ப் போன பழக்கமில்லாத பகல் நித்திரை வருகுதேயில்லை... (Office இல் என்ன செய்றனீர் என்று யாரும் கேட்க மாட்டீங்க தானே)

ஒரு blog வைச்சிருக்கிறாய்.. அப்பப்போ எதையாவது எழுதினால் என்ன என்று தோன்ற, வந்து இருந்து type செய்து கொண்டிருக்கிறேன்..

கடந்த Sememster களில் மூன்று பேர் சேர்ந்து படிச்சம்.. (தனியவே இப்படியெண்டால் மூன்று பேர் சேர்ந்தால் சொல்லவும் வேணுமோ. )

தான் உண்டு.. தன் பாடுண்டு என்று இருக்கும் தோழியின் அம்மா தவிர நாங்கள் மூவரும் மட்டுமே... அவரும் சில வேளைகளில் வீட்டில் நிற்க மாட்டார்.. சகல வசதிகளுடனும் தனி வீடு... Cable Connection உடன் TV..
பிடிச்ச நிகழ்ச்சிகள் போனால் ஒவ்வொருவராக TV முன்னால் அமர்ந்து விடுவோம்.. ஒருத்தர் எழுந்தாலும் மற்றவரை எழுப்ப முடியாது.. சமயத்தில் DVD இல் புதுப்படம்... தினமும் விதம் விதமாக வெவ்வேறு இடங்களிலிருந்தும் மதிய உணவு.. Delivery Service கொண்டுள்ள உணவகங்களின் list தேவைப்பட்டால் எங்களை அணுகலாம் என்று விளம்பரம் கூட போடப் பார்த்தோம்.. ஹி.. ஹி.. மதிய உணவை ஒரு கை பிடிச்சால் நித்திராதேவி அழைத்தபடியே இருப்பா...
அதனால் படிக்க முடியாமல் பல கதைகள் விமர்சனங்கள்... விதண்டாவாதங்களுடன் அரட்ட மட்டும் தொடரும். அப்பப்போ சண்டைகளும் வந்து செல்லும்.. இவ்வாறாக கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும்...

ஒரு நாளைக்கு ஒரு அலகு படித்திருந்தாலே பெரிய விஸயம்*..

(பரீட்சைக்கு ஒரு மாத்திற்கு முன்னரேயிருந்து 20 க்கும் மேற்பட்ட என் சக மாணவர்கள் Common Room இல் 2,3 மேசைகளை ஒன்றாக சேர்த்துப போட்டு எப்படி படிக்கிறார்கள் என்பது இன்னும் எனக்குப் புரியாத புதிராகவே இருக்கு.. )

இப்படியாக போனாலும் ஒவ்வொரு பரீட்சைக்கும் முதல் நாள் மட்டும் சமர்த்துப் பிள்ளைகளாக படித்து விடுவோம்...

வழமையை விட குறைந்த பெறுபேறுகள் போன Semester இல் கிடைத்ததால் இனி சேர்ந்து படிப்பதில்லை என்ற முடிவை ஏக மனதாக மூவரும் ஒத்துக் கொண்டு இப்போது தனியே படிக்கிறோம்...

நான் படிக்கும் இலட்சணத்தைத் தான் சொல்லிட்டேனே மேலே..

மற்ற இருவரும் எப்போதும் போலவே..

என்னுடைய பெறுபேறு இப்போதே தெரிந்து விட்டது எனக்கு.. மற்றயவர்களுடையதைப் பார்ப்போம்..

நான் இப்போதும் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன்.. :))
* - மற்ற 'sa' வைக் காணவில்லை.. "ஸ" இது தான் இருக்குது..


இவர்களும் பரீட்சைக்குப் படிக்கிறார்கள்..

Wednesday, September 12, 2007

Now my appa not bring anything to me

யாழ் மண்ணில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கொஞ்சமும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் ஒரு ஆறு வயதுப் பெண்ணிண் உணர்வாக வடிக்கப்பட்டடது.

Now my appa not bring anything to me.
Nothing in the shops he says
Why, how, reason they say I can't understand
Sweets , biscuits, butter, milk powder
Even egg and fish , Where all these have gone?
My loved ones give calls asking what I want?
A list I used to give, but helpless , no way to send it.

Three days ago my friend in my class told me
Her aunt from Colombo sent a postal parcel
Containing Milk powder, Sugar, biscuits, and washing powder
When they opened , a mixer! sugar with washing powder
But biscuits and Milk powder they enjoyed
My aunt too gave a call to know how we are?
I told her to send Biscuits and Milk powder
Not to send washing powder!
Every morning waiting for the postman

Yesterday morning my appa was late
To buy bread in the queue, no bread
I went to school without breakfast
And nothing for school interval
Today as usual curfew lifted at 5 A.M
People are in several queues
To ship, co-operative, Kerosene, etc.,
My appa went to the bread queue
Came with bread and plantain
I ate two slices and taken two to school

During the interval I opened the Tiffin box
My friend looked at me from next seat
She has not brought anything to eat
I found she has not eaten breakfast too
She has lost her father, no one to be in the queue
I broke the bread shared with her
I realized that the SAME BREAD
Appa breaking in the Church
I broke it in my small class room

- Thaniya Nesakumar


செய்தி: ஈழத்தில் அல்லற்படும் தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ நெடுமாறன் யாழ்ப்பாணம் நோக்கி படகில் மேற்கொள்ளும் "தமிழர் தியாகப் பயணம்" போராட்டம் தொடங்கியுள்ளது. - புதினம்.

Saturday, September 08, 2007

Lift பயணம்

நான் கல்வி கற்குமிடத்தில் maintenance க்காக மின்சாரத்தை நிறுத்தி மாற்று ஏற்பாட்டினூடாக மின்சாரத்தை வழங்கப்போவதாகவும் அதனால் ஓரிரு நிமிடங்கள் தடை ஏற்படுமெனவும் அறிவித்ததை தொடர்ந்து வழமையை விட கொஞ்சம் முதலே மதிய உணவுக்கான இடைவேளை தரப்பட்டது.


கெதியாக வீட்டை போகோணும் என்று மதியத்துடன் வகுப்புக்கு கள்ளம் போட்டு அவசர அவசரமாக வெளிக்கிட்டு Lift க்கு வந்த எனக்கும் மதிய உணவுக்காக வெளியே செல்ல வந்தவர்களுக்கும் அது மறந்து போச்சோ இல்லை மின்சாரம் நிற்க முதல் போயிடுவோமென்று நினைச்சமோ என்னமோ Lift க்குள்ள போயிட்டம்.. போக வேண்டிய தளத்துக்கான பொத்தான் வேலை செய்யவில்லை. என்னடா என்று பார்த்து கொண்டிருக்க மின்சாரம் போயிட்டுது... மீண்டும் மாற்று ஏற்பாட்டின் மூலம் மின்சாரம் வர திரும்பவும் பொத்தானை அழுத்த கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வேலை செய்திச்சு. ஆனால் நாங்கள் 12 வது தளத்தில நிற்க அது Basement ஐ காட்டுது.. கொஞ்ச நேரம் என்ன செய்யிறதெண்டே தெரியேல.. Lift மேலே/கீழே போவதாக தோன்றவில்லை... திறக்கவும் முடியவில்லை.. எல்லார் முகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பயம் தெரிஞ்ச மாதிரி இருந்திச்சு.


6, 7 பேர் நிண்டதால கொஞ்சம் கலகலப்பாக கதைச்சு பயத்தை வெளிக்காட்டாம நிண்டாங்கள். தனிய அல்லது தெரியாதவங்களோட நிண்டிருந்தா பயந்திருப்பன். எல்லாரும் எங்க பெடியன்கள் தானே ;-) என்று அவங்கட கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமா Lift அசையிறதை உணர முடிஞ்சுது எண்டாலும் மேலேயா கீழேயா போகுது என்று உணர முடியவில்லை.

ஒருத்தன் "மச்சான் நாங்கள்.. 12 இல நிற்கிறம்.. இது basement காட்டுது.. அப்ப basement க்குப் போய் கீழே போகப்போறம் போல" என்றும்... இன்னொருத்தன் தான் ஏதோ Cartoon இல பார்த்த மாதிரி மேலால உடைச்சுக் கொண்டு போகப்போறன்" எனறும் எல்லாத்துக்கும் மேலே மற்றவன் காலையில் படித்த Micro Controller Programming ஐ வைச்சு Lift எப்பிடி இயங்குது என்றும் விளக்கிக் கொண்டிருக்க Lift ஒரு மாதிரி Basement இல் போய் நிண்டிச்சு...

அதில இறங்கி ground க்கு வந்திருக்கலாம். மீண்டும் "G" and "9" அழுத்திட்டு நிண்டம்.. எங்கையும் நிற்காம மீண்டும் பயணம்..ஆனால் முதலில் Basement இல் நிண்டதால எங்கையாவது நிற்குமென்று நம்பி பயமில்லாமல் நிண்டம்.. இந்த முறை வானத்தல பறக்கப் போறம் போல என்று ஒருத்தன் சொல்லிக் கொண்டிருக்க 18ல் (அது தான் கடைசித் தளம்) நிண்டிச்சு..

எனக்கு இறங்கி படிக்கட்டால போவோமோ என்று தோன்றிச்சு.. இருந்தாலும் எப்பிடி அத்தனை படிகளைக் கடப்பது என்ற அலுப்பிலும் எல்லாரும் நிற்க நான் மட்டும் இறங்க நோண்டி என்றும் பேசாம நிண்டன் என்ன தான் நடக்குது பார்ப்போமே என்று,..

இந்த முறை இலக்கங்கள் ஒழுங்காக மாறி 12 ல் வந்து நிண்டிச்சு.. எங்களை வழி அனுப்பி வைச்ச சிலர் (Basement காட்டுது என்று சொல்லி ஏறாமல் விட்டவர்கள்) மற்ற Lift களில் சென்று விட சிலர் நிண்டார்கள்... எங்களைக் கண்டவுடனே சிரிச்சாங்க பாருங்க ஒரு சிரிப்பு... அதில அந்தத் தளமே அதிர்ந்திச்சுது... உண்மையாத்தான்... :">

அப்ப ஒருத்தன் சொன்னான்.. "மச்சான்... அப்பே கட்டிய program கரன்ன அதி" (எங்கட ஆக்கள் தான் program செய்திருப்பாங்கள் போல...) தங்கட ஆக்களின் திறமையில அப்பிடி ஒரு நம்பிக்கை.. he he...


இடைநடுவே Lift நிற்பது வேற.. இது மேலேயும் கீழேயும் மாறி மாறி பயணம்.. Lift இல் விண்வெளிக்கே போய் வந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு...