பனைமரக் காடுகளுக்கு விடை கொடுத்த பின் கட்டடக் காட்டுக்குள் வாழ்ந்த காலமும் போக இன்று தென்னை மரங்கள் சூழ ஒரு அழகிய சூழலில் வாழ்க்கை...
மறந்து போன செண்பகம், பல காலம் காணக் கிடைக்காத கிளி, அணில், சிட்டுக்குருவி, இதமான காற்று எல்லாமே நீண்ட காலத்தின் பின்...
இதுவும் நீடிக்கப் போவதில்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கட்டடங்களாக மாறிக் கொண்டிருக்கிறது இந்தப் பிரதேசமும்.....
ஒரு மயக்கும் மாலை நேரத்தில் இலங்கையின் சுற்றாலாத் தலங்களில் ஒன்றான Mount Lavania Beach நோக்கி என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...
Friday, November 16, 2007
மாலைப்பொழுதின் மயக்கத்திலே...
Posted by Chayini at 6:35 PM 8 comments
Labels: திரைப்பாடல்கள், நிழற்படம்
Friday, November 02, 2007
மரணம் வலி தருமா?
சமீப காலமாக ஒரே மரணச் செய்திகள்.. மரணம் மலிந்து விட்ட நாட்டில் இருந்து கொண்டு குடும்பத்தில், உறவினர்களில் பலரையும் இழந்து பழக்கமாகி போன நிலையில் இப்போதெல்லாம் எந்தவொரு உயிரிழப்பும் என்னைப் பாதிப்பதில்லை.. கேட்ட நிமிடத்தில் ஏற்படும் அந்த ஒரு உணர்வைத் தவிர வேறு உணர்வுகளற்ற மரக்கட்டையாகி போனேனோ என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இன்றைய மரணம், இல்லை இன்னமும் உணர்வுள்ளவளாக இருக்கிறாயென்று உணர்த்தியது..
சமீப காலமாக மரணத்திற்காக கவலைப்படுபவர்களாக காட்டிக் கொள்பவர்கள், துக்கம் விசாரிப்பவர்கள், என்ன நடந்தது என்று ஆதியோடந்தமாக கேட்டுக் கொள்பவர்கள், என்று யாரைப் பார்த்தாலும் ஒரு விதமான எரிச்சலே வருகிறது..
ஒரு மாதம் இருக்கும்.. அப்பாவின் சகோதரி(மாமி) இறந்து விட்டதாக யாழ்பாணத்திலிருந்து அழைப்பு வந்தது.. காலை வேளையில் வரும் தொலைபேசி அழைப்புக்கள் இந்த மாதிரியான செய்திகளையே கொண்டு வரும் என்று தெரியும். அத்தோடு இரண்டு நாட்கள் முன்பாக அவர் இறக்க முதலே இறந்தாக வந்த செய்தி அவரின் இறப்பு நிச்சயம் என்று தெரிவித்திருந்தது.. ஆகவே தொலைபேசி அடிக்கும் போது அண்மையில் இருந்தும் அம்மா எடுக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்..
மரணத்தின் மீது கொண்ட பயத்தாலல்ல.. செய்தியை சொல்பவருடன் அது பற்றி கதைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகவே... சொந்தங்களுடன் அவ்வளவாக நெருங்கிப் பழகாத குணம் என் குடும்பத்தவர்க்கு இருந்த போதும் மாமி குடும்பத்தோடு ஒட்டுறவாகவே என்றும் இருந்து வந்தோம். அருமையான ஒரு பெண்மணி.. எந்த ஒருவரும் அவரைக் குறை சொல்லி நான் அறிந்ததில்லை.. எல்லோருடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் அவர்..
மீண்டும் ஒரு மரணம்... என்னைத் தன் மாதிரியாக(Model) நினைக்கும் என்னை விட இரண்டு வயது குறைந்த தோழியின் அப்பா... சிறு வயதில் எங்களுடன் கிரிக்கெட், கரம், காட்ஸ், செஸ் என எல்வாவற்றிலும் சேர்ந்து கொள்வார்.. அந்த காலத்தில் தன் பிள்ளையைப் போலவே என்னையும் நடத்தியவர்.. அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசி மூலம் ஒரு காலை நேரத்தில் தெரிய வந்தது.. அந்த நேரம் அம்மா சமையல் வேலையில் இருக்க நானே அழைப்பை எடுக்க வேண்டியதாக போயிற்று.. செய்தியை என்னிடம் சொல்ல எதுவுமே கூறாது அம்மாவிடம் கொடுத்து விட்டு செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தேன்..
பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருந்த வாரத்தில் என் மேலாளரின் தகப்பானாரின் மறைவு.. 95 வயது வரை நன்றாக இருந்தவர்.. கடைசி நிமிடத்திலும் நன்றாகவே இருந்தாராம்... மரண வீட்டிற்கு செல்லவில்லை.. உண்மையைச் சொன்னால் எனக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமே கிடையாது.. 95 வயது வரை வாழ்ந்தவர் இன்னமும் வாழ்ந்திருக்கலாமேயென்ற என் துக்கத்தை பகிர்ந்து கொள்ளவா போகப் போகிறேன்..
சம்பிரதாயத்துக்காகத் தானே.. சம்பிரதாயத்தக்காக எதையும் செய்ய வேண்டிய கடப்பாடு எனக்கு இல்லை என்ற நினைப்போடு இருந்த போதும் அவர் மீண்டும் வேலைத்தளம் வரும்போது எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பம் நேரிட நண்பியைக் கேட்டேன்.. ஆறுதல் தெரிவித்து mail அனுப்பி விடு என்றாள்.. ஆறுதல் சொல்ல வேண்டுமென்ற எண்ணமும் இல்லை என்று அவளுடன் விவாதித்தேன்.. மற்றவர்கள் சென்று வந்திருந்த நிலையில் mail தானே, அனுப்பி விடு, இல்லாவிடில் நேரில் வரும் போது எதிர் கொள்ள கஷ்டம் என்ற அவளது ஆலோசனையின் நிமித்தம் mail அனுப்பினேன்..
மீண்டும் என் நண்பியின் அப்பாவின் மரணம்.. வேலை நேரத்தில் செல்ல வேண்டி ஏற்பட்டதால், காரணத்தை சொல்லி அனுமதி கோரினேன்.. அவரின் மனதில் எப்படியும் இவள் தனது வீட்டு நிகழ்வுக்கு வரவில்லை என்ற நினைப்பு வந்திருக்கும் தானே... இது போன்ற சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகத் தான் போயிருக்க வேண்டுமோ என்ற அந்த நிமிடத்தில் ஏற்பட்டது.
சரி.. நான் தான் எதற்காக மரண வீட்டிற்கு செல்கிறேன்.. உண்மையாக எனக்குள் கவலை இருக்கிறதா? நண்பி தகப்பனை இழந்து விட்டாள் என்ற வருத்தத்தை தவிர வேறு என்ன கவலை எனக்கு.. நான் போவது அவளுக்க உண்மையாகவே ஆறுதலை அளிக்குமா?
மரண வீட்டில் இருப்பவர்கள் எதற்காக அழுகிறார்கள்? சென்ற உயிருக்காகவா? இல்லை குறிப்பிட்ட அந்த உறவு இல்லாமல் இனி என்ன செய்யப் போகுறோம் என்பதற்காகவா? இப்படி யோசிப்பது பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும் மரண வீட்டில் வைத்து என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை..
உறவுகளின் மரணம் பற்றிய பாதிப்பு இல்லாதபோதும் ஒரு சில மரணங்கள் ரொம்பவும் பாதிக்கின்றன.. அந்த மரணம் கூட எதற்காக என்னைப் பாதிக்கிறது.. போராட்டத்தில் ஒரு ஈடு செய்ய முடியாத அங்கத்தவரை இழந்து விட்டோம் என்பதற்காகவா என்று கேட்டால் ஆம் அதுவும் தான்... ஆனால் அது மட்டுமல்ல...
இன்று வேலைத்தளத்தில் இருந்த போது அம்மாவின் தொலைபேசி அழைப்பு..
Net இல் News பார்த்தாயா?
இல்லை ஏன்?
கேட்டனான்.. - அம்மாவின் குரல் சரியாக இல்லை
என்னாச்சு, சொல்லங்கோவன்..
குண்டுத் தாக்குதலாம்..
எங்க கொழும்பிலயோ..
இல்லை கிளிநொச்சியில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டது..
என்ன இது.. நெடுகத்தானே கிளிநொச்சியில போடுறாங்க.. இவ என் இப்படி பதட்டப்படுகிறா.. (என்ன ஒரு நினைப்பு.. அடிக்கடி போட்டால் அடிக்கடி மரணச் செய்திகள் கேட்டால் அந்த மரணங்களில் இழப்பு புரிந்து கொள்ளப்படாத நிலை) யோசிச்சுக் கொண்டே செய்தியைப் பார்த்தேன்.. எதிர்பார்க்காத செய்தி.. அம்மாவின் பதட்டத்திற்கான காரணம் புரிந்தது.. அம்மாவை மீண்டும் அழைத்து "ஓம் news இருக்கு" என்று சொன்னேன்.. அம்மா TV யில் போன breaking news பார்த்து விட்டே எனக்கு அழைப்பு எடுத்திருந்தாலும் அதை நம்பவில்லை. நான் சொல்லும் போதும் நம்பவில்லை... அவர்களே அறிக்கை விட்டிருக்கிறார்களென வாசித்துக் காடடிய பின்னரே நம்பினா.. நீண்ட காலமாகவே தமிழ்ச்செல்வன் மரணம், அவர் தலைமையுடன் கருத்து வேறுபாடு என்று பல புரளிகளை இலங்கை அரசாங்கம் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் எப்படி நம்ப முடியும்..
ஆனால் இதுவும் அப்படி ஒரு செய்தியாக இருக்கக் கூடாதோ என்று அந்த நேரத்தில் மனம் ஏங்கியது..
தமிழ்ச்செல்வன்...
ஒரு விடுதலைப் புலி உறுப்பினராக, அரசியல்துறைப் பொறுப்பாளராக மட்டும் இல்லாமல் எங்கள் குடும்பத்தில் ஒருவராக அல்லது நெருக்கமான ஒருவராக அவர் எங்கள் மனதில் இருக்கிறார்..
அன்ரன் பாலசிங்கத்துக்குப் பிறகு நிறையவும் பாதித்த மரணம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடையதே..
எப்போதும் சிரித்த முகம்... சோகமான ஒரு விஷயத்தை சொல்லும் போதும் அவர் முகத்தில் ஒரு சிறு புன்னகை இருப்பது போலவே தோன்றும்.. அந்தச் சிரித்த முகம் எம்முடன் இல்லை.. பேட்டிகளில் நேர்மைத்தன்மையுடன் கூடிய பதில்.. சொல்ல முடியாக கேள்விகளுக்கு நேரடியாக மறுத்தவிடும் நாகரீகம்..
விமானத் தாக்குதலில் அதுவும் ஒரு எட்டப்பனின் காட்டிக் கொடுப்பில் உயிரை இழக்க வேண்டி வந்தது கொடுமை.. எம்மிடையே எட்டப்பன்கள் இருந்து கொண்டே வருவதே தமிழனின் சாபக்கேடு..
வீர மரணமடைந்த பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுக்கும் சகபோராளிகளுக்கும் எனதும் என் குடும்பத்தவரதும் வீர வணக்கங்கள்.
Posted by Chayini at 7:46 PM 3 comments
Labels: மரணம்
Sunday, October 21, 2007
நான் விற்கப்படுகிறேன்..
சீதனம் பெண்ணிற்குரிய ஓர் பிரச்சினை மட்டுமே என்ற பரவலான விம்பத்தை கலைக்கும் ஓர் ஆணின் உணர்வு..
...
நான் விற்கப்படுகிறேன்..
நான் விற்பனைக்காய்
இருக்கிறேன்..
ஆச்சரியப்படுகிறீர்களா?
சத்தியமாய்ச் சொல்கிறேன்..
சீதனச் சந்தையில்
சிறந்ததொரு பண்டமாய்..
நான் விற்பனைக்காய்
வைக்கப்பட்டிருக்கிறேன்.
என் உணர்வுகள்
எப்போதோ
மொத்தமாய் விற்பனை
செய்யப்பட்டாயிற்று..
கழித்து விடப்பட்ட
எஞ்சிய சில
நினைவுகளுடன்
நுகர்வோரு(ளு)க்காய்க்
காத்திருக்கிறேன்..
அதிக விலையி்ல்லை..
"இஞ்சினியர்" மாப்பிள்ளை
என்பதால் ஒரு
இருபத்தைந்து லட்சம்
மது மாந்த மறுக்கும்
மனதுடன் இருப்பதால்
மற்றுமோர் பத்து இலட்சம்
மனதிற்கினிய மாதுவை
மறப்பதற்காய்
மேலுமோர் ஐந்து லட்சம்
புகைப் பிடித்துக் கறுத்துப்
போகாத உதடுகட்காய்
இன்னுமோர் பத்து லட்சம்
வேறென்ன?
வீடு கார் எல்லாம்
வழமையாய்
வாங்குவது தானே..
என்அழகு
என் கம்பீரம்
என் குணம்
பழகும் இனிய சுபாவம்..
ச்சே..!
எது எதற்கு
விலை என்கிற
விவஸ்தையே
இல்லை என்கிறீர்களா?
அதுவும் சரி தான்..
வேண்டுமானால்
போனஸாய் போகட்டும்..
நான் விற்கப் படப்
போகின்றவள்
நல்ல குணமுடையவளாம்
குணத்தைக் கொண்டு போய்க்
குப்பையில் போடட்டாம்
அஞ்சுகம் மாதிரி
அழகானவளாம் -
கொஞ்சம் விலையைக்
குறைக்க யோசிக்கலாமாம்..
ஆபிரிக்கக் கண்டத்து
அழகி போன்றவளாம் -
அப்படியா?
ஐந்து லட்சம்
அதிகம் தந்தால்
'அட்ஜஸ்ட்' பண்ணிக்கலாமாம்..
சீதன அரக்கனை
அழித்தொழித்து
ஆண்களிடமிருந்தான
அடிமைச் சங்கிலியைத்(?)
தகர்த்தெறியப் போவதாய்
ஆர்ப்பரிக்கும்
பெண்ணிய வாதிகளே..
இங்கே நான், ஒரு ஆண்
விற்கப் படுகிறேன்
எனக்குள்ளும், ஒரு தலையாயக்
காமன் கணை எய்து
காதல் நரம்புகளின்
தொழிற்பாட்டைத்
தொடக்கி வைத்த
காதலியின் நினைவுகளை,
காதலின் உணர்வுகளை
காற்றினிலே கரைத்து விட்டு,
என் ஆசைகளை
அபிலாசைகளை
அனலினிலே
தகித்து விட்டு,
பத்தரை மாற்றுத்
தங்கமாய் - ஒரு
பத்தினியிடம்
விற்பதற்காகப்
பத்திரமாய்
வைக்கப்பட்டிருக்கிறேன்..
எல்லாம் சரி..
நான் விற்கப்படுவது
எதற்காய்த் தெரியுமா?
என் கூடப் பிறந்த
சகோதரிகட்கு
மாப்பிள்ளைகள்
வாங்குவதற்காய்
என் அன்னை
என்னை விற்கிறாள் -
என் மனைவியாய்
அமையப் போகிறவளுக்கு
ஆம்! இங்கே நான்
விற்கப்படுகிறேன்
நங்கை ஒருத்தியால்
மங்கை ஒருத்திக்கு
மரணித்துப் போன
மன உணர்வுகளுடன்..
- வல்லிபுரம் சுகந்தன்..
பேராதனைப் பல்கலைக்கழக இளங்கதிர் 33 வது ஆண்டு மலரிலிருந்து..
Posted by Chayini at 9:35 PM 11 comments
Labels: பிடித்தவை/பாதித்தவை
Sunday, October 07, 2007
காண்பது கனவா... நனவா?
ஓரிரு வாரங்களுக்கு முன் சக்தியில் Duet படம் போட்ட அன்று தான் முதன் முதலாக கவனித்தேன்... படத்தின் காட்சிகள் அடிக்கடி மறைக்கப்பட்ட அதே வேளை ஒலி மட்டும் சீராக கேட்டது.
சன் ரீ.வீயில் இருந்து பதிவு செய்யும் போது ஏதும் தவறு நடந்து விட்டதோ என்று முதலில் நினைத்தாலும் பின்னரும் அடிக்கடி காட்சிகள் மறைக்கப்பட ஒன்றும் புரியாமல் விழித்தேன்.. இன்று தான் அதற்கான விடை
கிடைத்தது...
இன்று ஒளிபரப்பான திரைப்படத்திலும் அவ்வாறு பல காட்சிகள் மறைக்கப்பட்டன, கீழே இந்த வாசகத்துடன்...
"This is due to Government Regulation on Tobacco and Alcohol"
Polythene பாவனையைத் தடை செய்த மகிந்த அரசாங்கம் இதற்கான தடையையும் கடந்த வருடம் மார்கழி முதலாம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வந்தது..
புகைத்தல் மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை ஊடகங்களின் மூலமோ சுவரொட்டிகள் விளம்பர பதாதைகளின் மூலமோ விளம்பரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வருடமாகும் நிலையில் இப்போது தான் தொலைக்காட்சியில் காட்சிகள் மறைக்கப்படுகின்றன.
கொண்ட நோக்கம் இதன் மூலம் அடையப்படுமா என்ற சந்தேகம் இருக்கின்ற போதும் படம் பார்க்கும் போது எரிச்சலைக் கிளப்புகின்ற போதும் இதனை முழுமையாக வரவேற்கிறேன்..
பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபாவனையில் ஈடுபடுவோர் குற்றவாளிகளாக காணப்படின் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத அபராதம் ஒரு ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் வழங்கப்படும்
இவையும் அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் முழுமையாக செயற்படுவதாக தெரியவில்லை...
எப்போதும் போல, பொது இடங்களில் புகைப் பிடிக்கிறார்கள்.. .. புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் ஒட்டப்பட்ட நிலையில் Bus ஓட்டுநரே புகைப்பிடிப்பதை இப்போதும் காண முடிகிறது.
புகைப் பிடிக்காதவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த செயற்பாட்டை நிறுத்தும் வகையில் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.. பார்ப்போம்..
Posted by Chayini at 2:32 PM 4 comments
Labels: என் பார்வை
Wednesday, October 03, 2007
Saturday, September 29, 2007
நான் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன்
இந்த ஐந்து மாதங்களில் முதன் முறையாக முழு நேரம் வீட்டில் நிற்கும் வாய்ப்பு.. கிடைக்காத அருமையான ஒன்றைப் பெற்றுக் கொண்ட சந்தோசம்...
முழு நேர இணைய வசதி வேற...
விடிய விடிய விழித்திருந்தாலும் இருக்கலாம்.. காலைத் தூக்கம் கலையக் கூடாது என்கி்ற ரகம் நான்..
எழுப்பி விடும் தொலைபேசி அலாரத்திடம் இன்னும் கொஞ்ச நேரம்... இன்னும் கொஞ்ச நேரம் என்று கெஞ்சி இனியும் முடியாது என்ற நிலையில் எழும்பி, அவசர அவசரமாய் தயாராகி, அது எங்கே... இது எங்கே என்று அம்மாவைப் போட்டு படுத்தியெடுத்து நான் வேலைக்குப் போக செல்ல வேண்டிய நேரம் கடந்தே விட்டிருக்கும்...
இப்போது அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை.. ஏன் என்றால் நான் பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருக்கிறேன்.. :D
இரவிரவாக இணையத்தில் உலாத்தல்...
Really Busy என்று Gtalk, MSN, Yahoo இலும் "I won't be available online much" என்று facebook இலும் message போட்டு விட்டு தொடர்கிறது அரட்டை..
நண்பர்களின் சுவர்க் கிறுக்கல்களுக்கு உடனுக்குடன் பதில் (punctual) ..
விடிவதே தெரியாமல் உறக்கம்...
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.. அப்பப்பா ஒழுங்காகத் தொலைக்காட்சி பார்த்து எத்தனை நாட்கள்...
மீண்டும் இணையத்தில் உலாத்தல் என்று இருந்த போது (என் நண்பர்களின் மொழியில் சொன்னால் குப்பை கொட்டிக் கொண்டிருந்த சமயம்) தோழியின் தொலைபேசி அழைப்பு...
"எங்க நிக்கிறாய்"
"வீட்டை.. "
"ஏன் இண்டைக்கு class இல்லையோ"
"இல்லை.. Study leave... இந்தக் கிழமை full ஆக வீட்டை தான் நிற்கப் போகிறேன்.. வேலையும் இல்லை" - சந்தோசத்தில் நான்
"ஓ.. Examaa? எப்ப Exam?"
"அடுத்த கிழமை தான்....
அதை விட்டிட்டு நீ சொல்லு...என்ன விஸயம்*"
"இல்லை.. வீட்டை நிற்கிறாய் என்றால் வீட்டை வருவம் என்று பார்த்தேன்.. புதுசா மாறின வீட்டுக்கு நீ தான் கூப்பிடுகிறாய் இல்லை... நானாக வருவம் என்று நினைச்சன்."
"No problem.. நீ வா.. இண்டைக்கு முழுக்க வீட்டை தான் நிப்பன்"
"இல்லை.. நீ Exam க்குப் படி.. முடிய வாறன்.. "
"சரி.. உன்ர இஸ்டம்*..."
அவள் வைத்து விட்டாள்..
படிக்கிறேன் என்று சொல்லி அவளை வரவிடாமப் பண்ணிட்டேன் என்று மனசாட்சி உறுத்த ஒரு பாடத்தின் ஓர் அலகைப் ஒருவாறாக படித்து முடித்தேன்...
மீண்டும் இணையத்தில் உலாத்தல்... எல்லாம் மேய்ஞ்சு முடிஞ்சு.. அலுப்பாக இருந்தது..தொலைக்காட்சியும் அலுப்படிச்சுது..
கொஞ்சம் நித்திரை கொண்டால் நல்லா இருக்கும் போல இருந்திச்சு.. படுப்பம் என்று படுத்தால் பாழாய்ப் போன பழக்கமில்லாத பகல் நித்திரை வருகுதேயில்லை... (Office இல் என்ன செய்றனீர் என்று யாரும் கேட்க மாட்டீங்க தானே)
ஒரு blog வைச்சிருக்கிறாய்.. அப்பப்போ எதையாவது எழுதினால் என்ன என்று தோன்ற, வந்து இருந்து type செய்து கொண்டிருக்கிறேன்..
கடந்த Sememster களில் மூன்று பேர் சேர்ந்து படிச்சம்.. (தனியவே இப்படியெண்டால் மூன்று பேர் சேர்ந்தால் சொல்லவும் வேணுமோ. )
தான் உண்டு.. தன் பாடுண்டு என்று இருக்கும் தோழியின் அம்மா தவிர நாங்கள் மூவரும் மட்டுமே... அவரும் சில வேளைகளில் வீட்டில் நிற்க மாட்டார்.. சகல வசதிகளுடனும் தனி வீடு... Cable Connection உடன் TV..
பிடிச்ச நிகழ்ச்சிகள் போனால் ஒவ்வொருவராக TV முன்னால் அமர்ந்து விடுவோம்.. ஒருத்தர் எழுந்தாலும் மற்றவரை எழுப்ப முடியாது.. சமயத்தில் DVD இல் புதுப்படம்... தினமும் விதம் விதமாக வெவ்வேறு இடங்களிலிருந்தும் மதிய உணவு.. Delivery Service கொண்டுள்ள உணவகங்களின் list தேவைப்பட்டால் எங்களை அணுகலாம் என்று விளம்பரம் கூட போடப் பார்த்தோம்.. ஹி.. ஹி.. மதிய உணவை ஒரு கை பிடிச்சால் நித்திராதேவி அழைத்தபடியே இருப்பா...
அதனால் படிக்க முடியாமல் பல கதைகள் விமர்சனங்கள்... விதண்டாவாதங்களுடன் அரட்ட மட்டும் தொடரும். அப்பப்போ சண்டைகளும் வந்து செல்லும்.. இவ்வாறாக கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும்...
ஒரு நாளைக்கு ஒரு அலகு படித்திருந்தாலே பெரிய விஸயம்*..
(பரீட்சைக்கு ஒரு மாத்திற்கு முன்னரேயிருந்து 20 க்கும் மேற்பட்ட என் சக மாணவர்கள் Common Room இல் 2,3 மேசைகளை ஒன்றாக சேர்த்துப போட்டு எப்படி படிக்கிறார்கள் என்பது இன்னும் எனக்குப் புரியாத புதிராகவே இருக்கு.. )
இப்படியாக போனாலும் ஒவ்வொரு பரீட்சைக்கும் முதல் நாள் மட்டும் சமர்த்துப் பிள்ளைகளாக படித்து விடுவோம்...
வழமையை விட குறைந்த பெறுபேறுகள் போன Semester இல் கிடைத்ததால் இனி சேர்ந்து படிப்பதில்லை என்ற முடிவை ஏக மனதாக மூவரும் ஒத்துக் கொண்டு இப்போது தனியே படிக்கிறோம்...
நான் படிக்கும் இலட்சணத்தைத் தான் சொல்லிட்டேனே மேலே..
மற்ற இருவரும் எப்போதும் போலவே..
என்னுடைய பெறுபேறு இப்போதே தெரிந்து விட்டது எனக்கு.. மற்றயவர்களுடையதைப் பார்ப்போம்..
நான் இப்போதும் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன்.. :))
இவர்களும் பரீட்சைக்குப் படிக்கிறார்கள்..
Posted by Chayini at 4:47 PM 13 comments
Labels: அனுபவம்
Wednesday, September 12, 2007
Now my appa not bring anything to me
யாழ் மண்ணில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கொஞ்சமும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் ஒரு ஆறு வயதுப் பெண்ணிண் உணர்வாக வடிக்கப்பட்டடது.
Now my appa not bring anything to me.
Nothing in the shops he says
Why, how, reason they say I can't understand
Sweets , biscuits, butter, milk powder
Even egg and fish , Where all these have gone?
My loved ones give calls asking what I want?
A list I used to give, but helpless , no way to send it.
Three days ago my friend in my class told me
Her aunt from Colombo sent a postal parcel
Containing Milk powder, Sugar, biscuits, and washing powder
When they opened , a mixer! sugar with washing powder
But biscuits and Milk powder they enjoyed
My aunt too gave a call to know how we are?
I told her to send Biscuits and Milk powder
Not to send washing powder!
Every morning waiting for the postman
Yesterday morning my appa was late
To buy bread in the queue, no bread
I went to school without breakfast
And nothing for school interval
Today as usual curfew lifted at 5 A.M
People are in several queues
To ship, co-operative, Kerosene, etc.,
My appa went to the bread queue
Came with bread and plantain
I ate two slices and taken two to school
During the interval I opened the Tiffin box
My friend looked at me from next seat
She has not brought anything to eat
I found she has not eaten breakfast too
She has lost her father, no one to be in the queue
I broke the bread shared with her
I realized that the SAME BREAD
Appa breaking in the Church
I broke it in my small class room
- Thaniya Nesakumar
செய்தி: ஈழத்தில் அல்லற்படும் தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ நெடுமாறன் யாழ்ப்பாணம் நோக்கி படகில் மேற்கொள்ளும் "தமிழர் தியாகப் பயணம்" போராட்டம் தொடங்கியுள்ளது. - புதினம்.
Posted by Chayini at 11:19 AM 1 comments
Labels: பிடித்தவை/பாதித்தவை
Saturday, September 08, 2007
Lift பயணம்
கெதியாக வீட்டை போகோணும் என்று மதியத்துடன் வகுப்புக்கு கள்ளம் போட்டு அவசர அவசரமாக வெளிக்கிட்டு Lift க்கு வந்த எனக்கும் மதிய உணவுக்காக வெளியே செல்ல வந்தவர்களுக்கும் அது மறந்து போச்சோ இல்லை மின்சாரம் நிற்க முதல் போயிடுவோமென்று நினைச்சமோ என்னமோ Lift க்குள்ள போயிட்டம்.. போக வேண்டிய தளத்துக்கான பொத்தான் வேலை செய்யவில்லை. என்னடா என்று பார்த்து கொண்டிருக்க மின்சாரம் போயிட்டுது... மீண்டும் மாற்று ஏற்பாட்டின் மூலம் மின்சாரம் வர திரும்பவும் பொத்தானை அழுத்த கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வேலை செய்திச்சு. ஆனால் நாங்கள் 12 வது தளத்தில நிற்க அது Basement ஐ காட்டுது.. கொஞ்ச நேரம் என்ன செய்யிறதெண்டே தெரியேல.. Lift மேலே/கீழே போவதாக தோன்றவில்லை... திறக்கவும் முடியவில்லை.. எல்லார் முகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பயம் தெரிஞ்ச மாதிரி இருந்திச்சு.
6, 7 பேர் நிண்டதால கொஞ்சம் கலகலப்பாக கதைச்சு பயத்தை வெளிக்காட்டாம நிண்டாங்கள். தனிய அல்லது தெரியாதவங்களோட நிண்டிருந்தா பயந்திருப்பன். எல்லாரும் எங்க பெடியன்கள் தானே ;-) என்று அவங்கட கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமா Lift அசையிறதை உணர முடிஞ்சுது எண்டாலும் மேலேயா கீழேயா போகுது என்று உணர முடியவில்லை.
ஒருத்தன் "மச்சான் நாங்கள்.. 12 இல நிற்கிறம்.. இது basement காட்டுது.. அப்ப basement க்குப் போய் கீழே போகப்போறம் போல" என்றும்... இன்னொருத்தன் தான் ஏதோ Cartoon இல பார்த்த மாதிரி மேலால உடைச்சுக் கொண்டு போகப்போறன்" எனறும் எல்லாத்துக்கும் மேலே மற்றவன் காலையில் படித்த Micro Controller Programming ஐ வைச்சு Lift எப்பிடி இயங்குது என்றும் விளக்கிக் கொண்டிருக்க Lift ஒரு மாதிரி Basement இல் போய் நிண்டிச்சு...
அதில இறங்கி ground க்கு வந்திருக்கலாம். மீண்டும் "G" and "9" அழுத்திட்டு நிண்டம்.. எங்கையும் நிற்காம மீண்டும் பயணம்..ஆனால் முதலில் Basement இல் நிண்டதால எங்கையாவது நிற்குமென்று நம்பி பயமில்லாமல் நிண்டம்.. இந்த முறை வானத்தல பறக்கப் போறம் போல என்று ஒருத்தன் சொல்லிக் கொண்டிருக்க 18ல் (அது தான் கடைசித் தளம்) நிண்டிச்சு..
எனக்கு இறங்கி படிக்கட்டால போவோமோ என்று தோன்றிச்சு.. இருந்தாலும் எப்பிடி அத்தனை படிகளைக் கடப்பது என்ற அலுப்பிலும் எல்லாரும் நிற்க நான் மட்டும் இறங்க நோண்டி என்றும் பேசாம நிண்டன் என்ன தான் நடக்குது பார்ப்போமே என்று,..
இந்த முறை இலக்கங்கள் ஒழுங்காக மாறி 12 ல் வந்து நிண்டிச்சு.. எங்களை வழி அனுப்பி வைச்ச சிலர் (Basement காட்டுது என்று சொல்லி ஏறாமல் விட்டவர்கள்) மற்ற Lift களில் சென்று விட சிலர் நிண்டார்கள்... எங்களைக் கண்டவுடனே சிரிச்சாங்க பாருங்க ஒரு சிரிப்பு... அதில அந்தத் தளமே அதிர்ந்திச்சுது... உண்மையாத்தான்... :">
அப்ப ஒருத்தன் சொன்னான்.. "மச்சான்... அப்பே கட்டிய program கரன்ன அதி" (எங்கட ஆக்கள் தான் program செய்திருப்பாங்கள் போல...) தங்கட ஆக்களின் திறமையில அப்பிடி ஒரு நம்பிக்கை.. he he...
இடைநடுவே Lift நிற்பது வேற.. இது மேலேயும் கீழேயும் மாறி மாறி பயணம்.. Lift இல் விண்வெளிக்கே போய் வந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு...
Posted by Chayini at 8:33 PM 10 comments
Labels: அனுபவம்
Friday, August 31, 2007
பாலைவனத்துச் சூரியன்
மூன்றாவது தடவையாக தமிழ்மணத்தில் சேர்ந்திருக்கிறேன்.. இந்த முறையாவது நிலைத்து நிற்கிறேனோ பார்ப்பம்.. இலங்கையில் இருந்து பதிபவர்கள் நிலைத்து நிற்பதில்லை என்ற எண்ணப்பாடு பலரிடத்தும் உண்டு. உண்மை தான். அனால் இப்போதெல்லாம் பலர் இலங்கையிலிருந்தும் ஆரம்பித்திருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது..
எப்போதும் எனக்குப் பிடிக்கும் சூரியனை பதிவிலிட்டு என் மீள் வருகையை ஆரம்பிக்கிறேன்.
Posted by Chayini at 9:59 PM 10 comments
Labels: ச்சும்மா
Wednesday, June 13, 2007
என்னவென்று சொல்ல....
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவின் அடுத்த நாள் என் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரது மறைவைப் பற்றிய பேச்சும் வந்தது."
ஆமா...நானும் கேள்விப்பட்டன்.. யாரது அன்ரன் பாலசிங்கம்?? " என்று ஒரு கேள்வி கேட்டான் அவன்... எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியேல... ஆடிப் போறது என்று சொல்லுவார்களே... அப்பிடி எண்டால் என்ன என்டதை அந்த நிமிஷம் தான் தெரிஞ்சு கொண்டன்.அன்ரன் பாலசிங்கத்தை தெரியாமல் என் நண்பனாக இவன்... ???இவன் இலங்கைப்பிரஜை தானா??...இலங்கையில தான் இருக்கிறானா?....குறைஞ்சது பேச்சுவார்த்தை நேரங்களில் செய்தியாவது கேட்டிருக்க மாட்டானா?....இவ்வாறாக பல கேள்விகள் எனக்குள் தோன்றிச்சுதே தவிர அவனுக்கு பதில் சொல்ல வரேல...
என்னத்தை சொல்ல???
அவன் மலையகத்தை சேர்ந்தவன்... கொழும்பில் தனியே வசிப்பவன்.. நிறைய வட கிழக்கு நண்பர்களைக் கொண்டவன்.. கொஞ்சமும் அரசியல் அறிவு இல்லை. என் சிங்கள நண்பர்களுக்கு தெரிந்தளவு கூட இனப்பிரச்சினையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. (நானறிந்த பெரும்பாலானோர் சிங்களப் ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் பிரச்சாரங்களையும் மீறி எமது பிரச்சினையை.. எங்கள் உணர்வுகளை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் நாட்டுப்பற்று என்ற பெயரில் அரசாங்கத்தை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள்.) ஒரு தமிழனாக இருந்து கொண்டு அவர்கள் அளவுக்குக் கூட இவன் இல்லையே...
அன்ரன் பாலசிங்கத்தை தெரிந்து வைத்திருப்பதற்கு அரசியல் அறிவு ஒன்றுமே தேவையில்லையே... சின்னப் பிள்ளைக்குக் கூட தெரியுமே அவரை..
ஜனாதிபதியின் தற்போதைய வாசஸ்தலமாகிய அலரி மாளிகையை அண்மித்ததாக கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே எங்கள் கல்விக்கூடம் அமைந்திருப்பதால் தினமும் கட்டடப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவம்/பொலீஸாரின் பரிசோதனைகளை முடித்தே உட்செல்ல முடியும். யாழ்ப்பாணத்திலும் எனது பாடசாலை உயர் பாதுகாப்ப வலயத்தினுள்ளேயே இருந்ததால் எனக்குப் பழகிப் போனகது தான் இந்தக் கெடுபிடிகள்.
எனக்குள் இயல்பாகவே அவர்கள் மீது இருக்கிற வெறுப்பின் காரணமாக இராணுவம்/பொலிஸாரின் பரிசோதனை நேரங்களில் கடுகடுவென்ற முகத்தோடும் அலட்சியப் போக்கோடும் நின்றே சோதனைகளை முடித்து உட்செல்லுவேன். அம்மா அடிக்கடி சொல்லுவா.. "தாக்குதல் நோக்கத்தோட வாறவை கூட இயல்பாகத் தான் இருப்பார்கள்.. நீ ஒண்டுமில்லாமல் இந்த மாதிரி நடந்து கொள்றதால உனக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறாயென்று"..
எனக்கும் அது தெரிந்திருந்தாலும் என் போக்கை மாற்ற விரும்பவில்லை. என் எதிர்ப்பை இப்படியாவது காட்ட வேண்டுமென்கிற எண்ணமோ என்னவோ...
பெரும்பாலான பரிசோதனை நேரங்களில் என்னோடு நிற்கும் என் நண்பனுக்கு இது புரிவதில்லை. ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறாயென்று அவன் முன்பொரு முறை கேட்டதற்கு என்னால் முடிந்தவரை நான் அனுபவித்தவற்றையும் என் உணர்வுகளையும் விளங்க வைக்க முயற்சி செய்தேன். அவனுக்கு புரிந்த மாதிரியும் தெரியவில்லை, அக்கறை இருக்கிற மாதிரியும் தெரியவில்லை.
அதன் பிறகு அவன் இருக்கும் நேரங்களில் அவனுடனோ பிறருடனோ அரசியல்/இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட எதுவுமே கதைப்பதில்லை. ஆனாலும் அன்ரன் பாலசிங்கத்தை தெரியாமல் இருப்பான் என்று நான் நினைக்கவே இல்லை. இன்னும் என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் சந்ததியினர் தமது சொந்த நாட்டினைப் பற்றி தெரியாமலே போகப் போகிறார்களோ என்று கவலைப்படுவது ஒருபுறம் இருக்க இப்படியானவர்களும் இருக்கிறார்களே... இதை என்னவென்று சொல்ல....
Posted by Chayini at 10:45 AM 3 comments