Tuesday, January 01, 2008

என்ன இது?

திகதி:
01.01.2008
ஆங்கிலப் புத்தாண்டு

செய்திக்கு முன்னே:
மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டு சாந்தியும் சமாதானமும் உள்ள ஆண்டாக அமையட்டும்.

தலைப்புச் செய்தி:
பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் சுட்டுக் கொலை

செய்தி:
பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலின் உள்வீதியில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதிப்பிற்குரிய மேன்மை தங்கிய இலங்கை ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்து:
இப் புதுவருடமானது எமது நாட்டுக்குச் சமாதானத்தை கொண்டு வந்து எமது மக்களிடையே சிறந்த புரிந்துணர்வு, நம்பிக்கை என்பவற்றைக் கட்டியெழுப்பும் என நீங்களும் நானும் எதிர்பார்ப்பதோடு முகங் கொடுக்கவுள்ள சவால்களுக்கு முன்னே நூற்றாண்டு காலமாக எமது சமூகத்திற்கு சக்தியாகவள்ள சகிப்புத்தன்மை பாரம்பரிய விழுமியங்கள் என்பவை மேலும் பலமடைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

மேலும்
சக்தியில் இருவாரங்களுக்கு முந்திய மின்னல் நிகழ்ச்சியில் மகேஸ்வரன்.

'கொழும்பிலிருந்து ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும் பத்துப் பேர் அங்கு நடைபெறும் படுகொலைகளுக்கு காரணம் அத்தோடு அவர்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய என்னால் இப்போது தயாரித்துக் கொண்டிருக்கப்படும் அறிக்கை எதிர்வரும் 8 ஆம் நாள் பாராளுமன்றத்தில் அளிக்கப்படுவதோடு இலங்கை சுதந்திர தினத்திற்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இற்கு அதன் பிரதி வழங்கப்படும்.

மேலும் இந்தப் படுகொலைகள் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் பின்னணியிலேயே நடைபெறுகிறது."

5 comments:

said...

///////"என்ன இது?"///////////

அதுதான்............

said...

இது தான் ... இலங்காபுரி...
இன்னும் சில காலங்களில் மகிந்தோபுரியாயும் மாறலாம்...

Anonymous said...

தமிழர்களிற்கு தமிழீழம் கிடைக்காதவரை ஏது புத்தாண்டு?

said...

இலங்காபுரியில் எப்போதோ Democracyயை படுகொலை செய்து ஆழக் குழி தோண்டி புதைக்கும் விட்டன மகிந்தரும் அவரது சகாக்களும்... இதுகூடவா தெரியாது உங்களுக்கு... ஏதோ இது தெரியாத மாதிரி புதிதாக 'என்ன இது?' என்று கேட்கின்றீர்கள்...

Anonymous said...

தெரியாதவங்க தெரிஞ்சு கொள்ள எழுதியிருப்பாங்க போல...