Wednesday, October 05, 2005

பிடித்ததில் ஒன்று

என் காதலால் உனக்கு எவ்விதத் தொல்லையும்
உண்டாகாத வண்ணம் உன்னை நான் அப்படிக்
காதலிப்பேன்; இணை பிரியாது
எந்நேரமும் உன்னுடன் ஒட்டிக்கொண்டு
ஓர் இதயம் இயங்குகிறது
என்பதைத் தவிர……

நன்றியுணர்வுடைய நேசமும்
பாசமும் கொண்ட ஓர் இதயம்
என்றும் உனக்கே உரியதாயிருந்து….

உனக்காக எதுவும் செய்யத் தயாராயுள்ள
ஓர் இதயம் உன்னுடன் இணைந்து
இயங்குகிறது என்பதைத் தவிர..

வேறு எதுவும் உனக்கு தெரியாதபடி…
அப்படி உன்னைக்
காதலிப்பேன்.


-மயோதர் தாஸ்தவேய்ஸ்கி-
(வெண்ணிற இரவுகள்)

0 comments: